இந்நிலையில் இருவரும் ஆந்திர மாநிலம், அன்னமய்யா மாவட்டம், ராயச்சோட்டியில் உள்ள கோத்தப்பள்ளிக்கு கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு சென்று புடவை வியாபாரம் செய்வது போல் நடித்து வந்தனர். இதற்கிடையில் இருவருக்கும் திருமணமும் நடந்துள்ளது. இந்நிலையில், சமீபத்தில் அவர்களின் நடமாட்டத்தை அடையாளம் கண்ட தமிழக போலீசார் இருவரையும் கடந்த சில நாட்களுக்கு முன்பு கைது செய்து அவர்களின் செல்போன்களை பறிமுதல் செய்தனர். மேலும், இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
இந்நிலையில் குண்டு வெடிப்பில் தொடர்புடையதாக பயங்கரவாதி மன்சூர் மனைவி ஷமிம், அபுபக்கர் சித்திக்கின் மனைவி சாய்ரா பானு ஆகியோரை நேற்று ஆந்திரா போலீசார் கைது செய்து ராயச்சோட்டி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். மேலும் இருவரது வீட்டில் இருந்தும் சக்தி வாய்ந்த 2 சூட்கேஸ் வெடிகுண்டு, 2 பக்கெட் வெடிகுண்டுகளை பறிமுதல் செய்தனர். இந்நிலையில் நேற்று மாலை பறிமுதல் செய்யப்பட்ட 4 வெடிகுண்டுகளையும் போலீசார் ஆள்நடமாட்டம் இல்லாத பகுதியில் வெடிக்கச் செய்தனர்.
The post தமிழ்நாட்டில் பல்வேறு குண்டு வெடிப்புகளில் தொடர்புடைய 2 தீவிரவாதிகளின் மனைவிகள் கைது: சூட்கேஸ், 2 பக்கெட் வெடிகுண்டுகள் பறிமுதல் appeared first on Dinakaran.
