அதுவே நம் பலத்தை உலகுக்கு காட்டியது. ஒவ்வொரு முறையும் நாம் அவர்களை தண்டிக்கவில்லை. ஆனாலும் பாகிஸ்தான் அதனை மேற்கொண்டு பெரிதுபடுத்திக் கொண்டிருந்தது. அதற்காகவே நாம் அவர்களுக்கு பாடம் கற்பித்தோம்.இந்த ஆபரேஷன் சிந்தூர் வரலாற்றில் பல ஆண்டுகளுக்கு நிலைத்து நிற்கும். குறைந்த நாட்களில் தன்னுடைய இலக்கை எட்டிய போர் இதுவாகும். ரஷ்யா-உக்ரைன் இடையேயான போர், இஸ்ரேல்-ஹமாஸ், இஸ்ரேல்-ஈரான் என போர்கள் பல நாட்களாக, மாதங்களாக வருடங்களாக நடக்கிறது. அதில் ஒரு தரப்பினரும் தங்கள் இலக்கை அடையவில்லை. பாதுகாப்பு குறித்து படிப்பவர்களும், ஆராய்பவர்களும் ஆபரேஷன் சித்தூர் குறித்து இன்னும் பல ஆண்டுகளுக்கு ஆராய்ச்சி செய்வார்கள். இந்தியாவை ஆபரேஷன் சிந்துருக்கு முந்தைய பிந்தைய என பார்க்கும் வகையில் மாற்றியது இந்த ஆபரேஷன். இவ்வாறு அவர் பேசினார்.
The post சிந்தூர் ஆபரேஷனின் வெற்றி ஆயுதப் படை பணியாளர்களை போற்றும் வரவேற்பு நிகழ்ச்சி: ஆளுநர் பங்கேற்பு appeared first on Dinakaran.
