போலீஸ் அதிகாரியாக நடிக்கும் ஈஷா ரெப்பா

சென்னை: தெலுங்கு படங்களில் பிசியாக நடித்து வரும் ஈஷா ரெப்பா மீண்டும் தமிழுக்கு வருகிறார். மலை, ப்ளூ ஸ்டார் படங்களை தயாரித்து வரும் லெமன் லீஃப் கிரியேஷன் தயாரிக்கும் பெயரிடப்படாத படத்தில் விக்ரம் பிரபு ஜோடியாக நடிக்கிறார். இவர்களுடன் ‘பர்மா’ படத்தில் நாயகனாக நடித்த மைக்கேல் தங்கதுரை நடிக்கிறார். இயக்குநர்கள் சுசீந்திரன் மற்றும் சற்குணம் ஆகியோரிடம் உதவி இயக்குநராக பணிபுரிந்த ரமேஷ் ரவிச்சந்திரன் இயக்குகிறார். ஜிப்ரான் இசை அமைக்க ராசாமதி ஒளிப்பதிவு செய்கிறார். ஆர்.கணேஷ் மூர்த்தி மற்றும் ஜி சுந்தர்யா தயாரிக்கிறார்கள். ‘இது ஒரு கிரைம் த்ரில்லர் படம்.

இதில் விக்ரம் பிரபு, ஈஷா ரெப்பா இருவருமே போலீஸ் அதிகாரிகளாக நடிக்கிறார்கள். விக்ரம் பிரபு ஏற்கெனவே போலீஸ் கேரக்டரில் நடித்திருக்கிறார். ஈஷா ரெப்பாவின் உயரமும், தோற்றமும் போலீஸ் கேரக்டருக்கு பொருத்தமாக இருந்ததால் அவர் தேர்வு செய்யப்பட்ார். சென்னை மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் படப்பிடிப்பு நடக்கிறது’ என்றார் இயக்குனர் ரமேஷ் ரவிச்சந்திரன்.

The post போலீஸ் அதிகாரியாக நடிக்கும் ஈஷா ரெப்பா appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.

Related Stories: