6 மாதம் கட்சியை வலுப்படுத்தும் பணிகளை மட்டுமே மேற்கொள்ள உள்ளோம். தேர்தலுக்கு இன்னும் ஒருவருட காலம் உள்ளது. அதனால் நாங்கள் இந்த முறை மிகவும் யோசித்து, நிதானமாக தான் முடிவு எடுப்போம். பாராளுமன்ற தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணியில் தான் இருந்தோம். கூட்டணி குறித்து யாரிடமும் எதுவும் பேசவில்லை, அதிகாரப்பூர்வமாக தெரிவிப்போம். தவறான செய்திகளை பரப்ப வேண்டாம் என்று வேண்டுகோளை வைக்கிறேன். பாஜ மாநில தலைவர் மாற்றம் என்பது அக்கட்சியின் முடிவு. அதில் எங்களின் கருத்து எதுவும் இல்லை. புதிய தலைவருக்கு தே.மு.திக. சார்பில் வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறினார்.
The post தேர்தலுக்கு இன்னும் ஒருவருடம் உள்ளது கூட்டணி குறித்து இந்த முறை மிகவும் யோசித்து நிதானமாக முடிவு எடுப்போம்: தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா பேட்டி appeared first on Dinakaran.
