5 ஏக்கரில் சந்திரபாபு நாயுடு சொந்த வீடு

திருமலை: ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, அமராவதியில் வாங்கியுள்ள 5 ஏக்கர் நிலத்தில், சொந்த வீடு கட்டுவதற்கு நேற்று குடும்பத்தினருடன் பூமி பூஜை செய்தார். ஆந்திர மாநில அமராவதியில் தலைமை செயலகத்திற்குப் பின்னால் 5 ஏக்கர் நிலத்தில் சொந்த வீடு கட்ட அம்மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடு முடிவு செய்தார். வீடு கட்டுவதற்காக பூமி பூஜை நேற்று நடந்தது. இதில் சந்திரபாபு நாயுடு தனது குடும்பத்தினருடன் கலந்து கொண்டார். முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு தற்போது உண்டவல்லியில் ஒரு வாடகை வீட்டில் வசித்து வருகிறார். அடுத்த ஆண்டு இறுதிக்குள் இந்த இடத்தில் வீட்டின் கட்டுமான பணிகள் முடிந்து சொந்த வீட்டில் குடியேறுவார் என கூறப்படுகிறது.

The post 5 ஏக்கரில் சந்திரபாபு நாயுடு சொந்த வீடு appeared first on Dinakaran.

Related Stories: