ஜாமியா மில்லியா பல்கலைக்கழக தேர்வில் சர்ச்சைக்குரிய கேள்வி தயாரித்த பேராசிரியர் இடைநீக்கம்

 

புதுடெல்லி: டெல்​லி​யின் ஜாமியா மில்​லியா இஸ்​லாமி​யா (ஜேஎம்ஐ) பல்​கலைக்​கழகத்​தின் வினா தாளில், முஸ்​லிம்​களுக்கு எதி​ரான கேள்வி இடம் பெற்​றது. அதை தயாரித்த பேராசிரியர் இடைநீக்​கம் செய்​யப்பட்​டுள்ளார். ஒன்றிய அரசின் பல்​கலைக்​கழகங்​களில் ஒன்​றாக இருப்​பது ஜேஎம்ஐ பல்​கலைக்​கழக​மாகும். சிறு​பான்மை அந்​தஸ்து பெற்ற இந்​த பல்​கலைக்​கழகத்தின் இளநிலை மாணவர்களுக்கு பரு​வ தேர்வு நடை​பெற்று வரு​கிறது. பி.ஏ. ஹானர்ஸ் சமூகப்பணி பிரி​வின் ஒரு கேள்​வி தாளில், 15 மதிப்​பெண்​ணுக்​கான ஒரு கேள்​வி​யும் இடம் பெற்​றிருந்​தது. அதில், ’பொருத்​த​மான எடுத்​துக்​காட்​டு​களு​டன் இந்​தி​யா​வில் உள்ள முஸ்​லிம் சிறுபான்மையினருக்கு எதி​ரான அட்​டூழி​யங்​களை பற்றி விவரிக்​க​வும்’ என கேட்​கப்​பட்​டிருந்​தது. இந்த கேள்வி பாடங்​களுக்கு எந்த வகை​யில் தொடர்புடையது என சமூகவலை​தளங்​களில் கேள்வி​கள் எழுந்​தன.

இதையடுத்​து, அந்​த கேள்​வித்​தாளை தயாரித்த பேராசிரியர் வீரேந்​திர பாலாஜி பணி​யிடைநீக்​கம் செய்யப்பட்​டுள்​ளார். மேலும், இந்த விவ​காரம் குறித்து விசா​ரிக்க பல்​கலைக்​கழகம் ஒரு விசா​ரணை குழு​வை​யும் அமைத்​துள்​ளது. அக்​குழு தனது அறிக்​கை​யை சமர்ப்​பிக்​கும் வரை, பேராசிரியர் பாலாஜி​யின் இடைநீக்​கம் தொடரும் எனவும் ஜேஎம்ஐ பல்​கலைக்​கழக நிர்​வாகம் குறிப்​பிட்​டுள்ளது. இந்த உத்​தர​வை குறிப்​பிட்​டு, ஒன்றிய தகவல் மற்​றும் ஒலிபரப்பு அமைச்​சகத்​தின் மூத்த ஆலோ​சக​ரான கஞ்​சன் குப்​தா​வும், எக்​ஸ்​ சமூக வலைதளத்​தில்​ பகிர்​ந்​திருந்​​தார்​. இதன்​பிறகு, இந்​த விவ​காரம்​ மேலும்​ முக்​கி​யத்​து​வம்​ பெற்​றுள்​ளது.

Related Stories: