சண்டிகர்: ஐபிஎல் டி20 பஞ்சாப் அணிக்கு 206 ரன்களை ராஜஸ்தான் அணி வெற்றி இலக்காக நிர்ணயித்தது. சண்டிகரில் நடைபெற்று வரும் போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் அணியின் கேப்டன் பந்துவீச்சை தேர்வு செய்தார். இதனையடுத்து முதலில் களமிறங்கிய ராஜஸ்தான் அணி 20 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 205 ரன்கள் எடுத்தது. ராஜஸ்தான் அணியில் அதிகபட்சமாக ஜெய்ஸ்வால் 67, ரியான் 43, சஞ்சு சாம்சன் 38 ரன்கள் எடுத்தனர். இதனை தொடர்ந்து 206 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பஞ்சாப் அணி களமிறங்க உள்ளது.
The post ஐபிஎல் டி20: பஞ்சாப் அணிக்கு 206 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது ராஜஸ்தான் அணி appeared first on Dinakaran.