மியாமி ஓபன் டென்னிஸ்: சாம்பியன் ஆவாரா சபலென்கா? ஜெஸிகாடன் இன்று இறுதி போட்டி

மியாமி: மியாமி ஓபன் டென்னிஸ் மகளிர் அரை இறுதிப் போட்டியில் நேற்று உலகின் நம்பர் ஒன் வீராங்கனை அரைனா சபலென்கா அபாரமாக வென்று இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றார். அமெரிக்காவின் மியாமி நகரில் மியாமி ஓபன் டென்னிஸ் போட்டிகள் நடந்து வருகின்றன. நேற்று நடந்த மகளிர் ஒற்றையர் அரை இறுதிப் போட்டியில் பெலாரஸ் வீராங்கனை அரைனா சபலென்கா, இத்தாலி வீராங்கனை ஜாஸ்மின் பவோலினி உடன் மோதினார். அற்புதமாக ஆடிய சபலென்கா 6-2, 6-2 என்ற நேர் செட்களில் வென்று இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றார். மற்றொரு போட்டியில் அமெரிக்காவின் ஜெஸிகா பெகுலா, பிலிப்பைன்ஸ் வீராங்கனை அலெக்சாண்ட்ரா மேனிகோ உடன் மோதினார். முதல் இரு செட்களை ஆளுக்கு ஒன்றாக கைப்பற்றினர். வெற்றியை தீர்மானிக்கும் மூன்றாவது செட்டை பெகுலா வசப்படுத்தினார். அதனால், 7-6, 5-7, 6-3 என்ற செட் கணக்கில் அவர் வென்று இறுதிப் போட்டிக்கு முன்னேறினார். பெகுலா- சபலென்கா இடையிலான இறுதிப் போட்டி இன்று நடக்கிறது.

* அரையிறுதியில் ஜோகோவிச்
ஆடவர் பிரிவு காலிறுதிப் போட்டியில் நேற்று செர்பிய வீரர் நோவக் ஜோகோவிச், அமெரிக்க வீரர் செபாஸ்டியன் கோர்டா உடன் மோதினார். அபாரமாக ஆடிய ஜோகோவிச், 6-3, 7-6 என்ற நேர் செட் கணக்கில் வென்று அரை இறுதிக்கு தகுதி பெற்றார்.

The post மியாமி ஓபன் டென்னிஸ்: சாம்பியன் ஆவாரா சபலென்கா? ஜெஸிகாடன் இன்று இறுதி போட்டி appeared first on Dinakaran.

Related Stories: