கஞ்சா விற்ற 2 பேர் கைது

ஓமலூர், மார்ச் 23: இரும்பாலை மதுவிலக்கு பிரிவு போலீசார், கஞ்சா விற்பனை தடுப்பு வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது சேலம் – பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில், ஓமலூரில் உள்ள ஓட்டல் கடையில் சோதனை நடத்தி, கஞ்சா விற்பனையில் ஈடுபட்டிருந்த வாலிபரை பிடித்து கைது செய்தனர். விசாரணையில், அவர் ஓமலூர் வண்டிபேட்டையை சேர்ந்த தர்மதுரை (26) என்பதும், தேசிய நெடுஞ்சாலையில் லாரி மற்றும் ஆம்னி பஸ் டிரைவர்களுக்கு கஞ்சா விற்பனை செய்ததும் தெரியவந்தது.

அவரிடம் இருந்து கால் கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர். அதேபோல், காடையாம்பட்டி அடுத்த பண்ணப்பட்டியில் பள்ளி மாணவர்கள் மற்றும் தேசிய நெடுஞ்சாலையில் செல்லும் வாகனங்களின் டிரைவர்களுக்கு கஞ்சா விற்பனை செய்து வந்த பண்ணப்பட்டியை சேர்ந்த பிரசாந்த் (23) என்பவரை கைது செய்த போலீசார், அவரிடம் இருந்து கால் கிலோ கஞ்சா பறிமுதல் செய்தனர். தொடர்ந்து, இருவரையும் ஓமலூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய போலீசார், ஓமலூர் கிளை சிறையில் அடைத்தனர்.

The post கஞ்சா விற்ற 2 பேர் கைது appeared first on Dinakaran.

Related Stories: