சூலூர் தொகுதியில் மந்திகிரி கோயிலில் மண்டபம் கட்டப்படும்: அமைச்சர் சேகர்பாபு பதில்

சென்னை: சூலூர் தொகுதியில் உள்ள மந்திகிரி வேலாயுதசுவாமி கோயிலுக்கு ரூ.1 கோடியில் திருமண மண்டபம் கட்டப்படும் என அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார். திருமண மண்டபம் கட்டும் பணி 3 மாதத்தில் தொடங்கப்படும். கோவை சூலூர் வைத்தீஸ்வரன் கோயில் குடமுழுக்கு மே மாதம் நடைபெறும். மருதமலை கோயிலில் உலகமே வியக்கும் வகையில் பிரம்மாண்ட முருகன் சிலை அமைக்கப்பட உள்ளது. மருதமலை கோயிலில் ரூ.37 கோடி மதிப்பில் பெருந்திட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன என உறுப்பினர் கந்தசாமி கேள்விக்கு அமைச்சர் சேகர்பாபு பதில் அளித்துள்ளார்.

The post சூலூர் தொகுதியில் மந்திகிரி கோயிலில் மண்டபம் கட்டப்படும்: அமைச்சர் சேகர்பாபு பதில் appeared first on Dinakaran.

Related Stories: