வளர்ச்சி பணிகள் குறித்து ஆலோசனை

காரிமங்கலம், மார்ச் 19: காரிமங்கலம் ஒன்றியத்தில் உள்ள 30 ஊராட்சிகளில் நடந்து வரும் ஒன்றிய, மாநில அரசு திட்டப்பணிகள் மற்றும் கலைஞர் கனவு இல்ல திட்டம், தேசிய ஊரக வேலை உறுதி அளிப்பு திட்ட பணிகள், குடிநீர் பணிகள் குறித்தும், நிலுவையில் உள்ள பணிகள் குறித்த ஆலோசனை கூட்டம் பிடிஓ அலுவலக கூட்ட அரங்கில் நடந்தது. கலெக்டரின் நேர்முக உதவியாளரும், மண்டல அலுவலருமான வேடியப்பன் தலைமை வகித்து, பணிகளை விரைந்து முடிக்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார். முன்னதாக திண்டல், அனுமந்தபுரம், பிக்கனஅள்ளி ஆகிய ஊராட்சிகளில் நடந்து வரும் வளர்ச்சி திட்ட பணிகள் மற்றும் பழுதடைந்த அங்கன்வாடி மையம் ஆகியவற்றை பார்வையிட்டு ஆய்வு செய்தார். இக்கூட்டத்தில் பிடிஓ.,க்கள் சர்வோத்தமன், நீலமேகம் மற்றும் துணை பிடிஓ.,க்கள் கலைவாணி, உமா, சரளா ராமஜெயம், வீரபத்திரன், பொறியாளர்கள் முருகன், இளவேனில், சரத்குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

The post வளர்ச்சி பணிகள் குறித்து ஆலோசனை appeared first on Dinakaran.

Related Stories: