மனைவியை தாக்கிய லாரி டிரைவர் கைது

சேந்தமங்கலம், மார்ச் 18: நாமக்கல் மாவட்டம், சேந்தமங்கலம் அடுத்த காளப்பநாயக்கன்பட்டி, புதூரை சேர்ந்தவர் லிங்கேஸ்வரன் (39), லாரி டிரைவர். இவரது மனைவி கௌசல்யா (33), இவர்களுக்கு திருமணம் ஆகி 15 ஆண்டுகள் ஆகிறது. இவர்களுக்கு 9 வயதில் மாற்றுத்திறன் கொண்ட மகன் இருக்கிறான். இந்நிலையில் லிங்கேஸ்வரன், வேலைக்கு செல்லாமல், மது குடித்து விட்டு வந்து மனைவியிடம் அடிக்கடி தகராறு செய்து வந்துள்ளார்.

கடந்த 2 நாட்களுக்கு முன்பு, கணவன்-மனைவி இருவருக்கும் தகராறு ஏற்பட்டது. இதில் லிங்கேஸ்வரன், மனைவி கௌசல்யாவை சரமாரியாக தாக்கினார். இதில் படுகாயம் அடைந்த அவரை, அக்கம் பக்கத்தினர் மீட்டு, நாமக்கல் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அவர் கொடுத்த புகாரின் பேரில், சேந்தமங்கலம் போலீசார் வழக்கு பதிவு செய்து, லிங்கேஸ்வரனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post மனைவியை தாக்கிய லாரி டிரைவர் கைது appeared first on Dinakaran.

Related Stories: