சென்னை: இன்று முதல் மார்ச் 1 வரை டெல்டா மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை காரணமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை துரிதப்படுத்த வேண்டும் டெல்டா மாவட்ட ஆட்சியர்களுக்கு தமிழ்நாடு அரசு அறிவுறுத்தியுள்ளது. மேலும் அனைத்து துறைகளையும் ஒருங்கிணைத்து கனமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் எனவும் நெல் கொள்முதல் நிலையங்களில் இருக்கும் நெல் மூட்டைகளை பாதுகாப்பான இடத்தில் வைக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
The post டெல்டா மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை: முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க தமிழ்நாடு அரசு உத்தரவு appeared first on Dinakaran.