அகஸ்தியா தியேட்டரை வாங்கினாரா நயன்தாரா?

சென்னை: சென்னை தண்டையார்பேட்டையில் அகஸ்தியா தியேட்டர் கடந்த 2020ம் ஆண்டு மூடப்பட்டது. எம்ஜிஆர், சிவாஜி, கமல், ரஜினி, அஜித், விஜய் உள்பட பல பிரபல நடிகர்களின் படங்கள் இங்கு திரையிடப்பட்டன. இந்த தியேட்டர் கடந்த 1967ம் ஆண்டு திறக்கப்பட்டது. அகஸ்தியா தியேட்டர் உரிமையாளர்களுக்கு சொந்தமான தியேட்டர் தான் சென்னை அண்ணா சாலையில் உள்ள தேவி தியேட்டர் ஆகும். அகஸ்தியாவில் 1967ம் ஆண்டு பாலசந்தரின் ‘பாமா விஜயம்’ படம் தான் முதல் படமாக திரையிடப்பட்டது.

முதல் படமே நல்ல வசூலை தியேட்டருக்கு அள்ளிக்கொடுத்தது. தொடர்ந்து 50 ஆண்டுகளாக இந்த தியேட்டர் ரசிகர்களை மகிழ்வித்தது. ஆனால் 2000ம் ஆண்டுகளில் மல்டிபிளக்ஸ் தியேட்டர்களின் வருகையால் அகஸ்தியா தியேட்டரும் நஷ்டத்தில் இயங்க ஆரம்பித்து. இதையடுத்து கடந்த 2020ல் இந்த தியேட்டர் மூடப்பட்டது. இப்போது இந்த தியேட்டரை நயன்தாரா விலைக்கு வாங்கியிருப்பதாக சினிமா வட்டாரத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அவர் இங்கு மல்டிபிளக்ஸ் தியேட்டர் திறக்க திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

The post அகஸ்தியா தியேட்டரை வாங்கினாரா நயன்தாரா? appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.

Related Stories: