திருவள்ளூர்: திருவள்ளூர் அடுத்த புட்லூர் ராமாபுரம் பகுதியைச் சேர்ந்தவர் மூக்கு முத்து கொண்டையா (45). இவர் நேற்றுமுன்தினம் இரவு 9 மணியளவில் புட்லூர் ரயில் நிலையத்தில் நடைமேடை ஒன்றில் ரயிலுக்காக காத்து கொண்டிருந்தார். அப்போது மர்ம நபர் ஒருவர் அவரிடம் கத்தியை காட்டி மிரட்டி செல்போன் மற்றும் ரூ.300ஐ பறித்து சென்றார். இதுகுறித்து மூக்கு முத்து கொண்டையா கொடுத்த புகாரின்படி திருவள்ளூர் ரயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். பின்னர் நடத்திய விசாரணையில் செல்போன் மற்றும் பணம் பறித்த நபர் சென்னை வண்ணாரப்பேட்டை பகுதியைச் சேர்ந்த மணிகண்டன் (30) என்பது தெரிய வந்தது. இதையடுத்து மணிகண்டனை கைது செய்த ரயில்வே போலீசார், செல்போன், பணத்தை பறிமுதல் செய்தனர்.
The post செல்போன் பறித்தவர் கைது appeared first on Dinakaran.