குழந்தை மரணத்தில் பல சந்தேகங்கள் உள்ளதால், விசாரணையை வேறு விசாரணை அமைப்புக்கு மாற்ற வேண்டும்என்று கோரப்பட்டிருந்தது. இந்த மனு நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது ஆஜரான காவல்துறை தரப்பு வழக்கறிஞர் எஸ். வினோத்குமார், மனு குறித்து பதிலளிக்க அவகாசம் வேண்டுமென்று கோரினார். அப்போது, மனுதாரர் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், இடைக்கால உத்தரவாக சிசிடிவி காட்சிகளை பாதுகாத்து வைக்குமாறு உத்தரவிட வேண்டும் என்றார். பதில் மனுத்தாக்கல் செய்த பிறகு அது குறித்து முடிவெடுக்கலாம் என்று தெரிவித்த நீதிபதி மனு குறித்து டிஜிபி மற்றும் சிபிஐ உள்ளிட்டோர் பதிலளிக்குமாறு உத்தரவிட்டு விசாரணையை பிப்ரவரி 4ம் தேதிக்கு ஒத்திவைத்தார்.
The post கழிவுநீர் தொட்டியில் விழுந்து குழந்தை பலி சிபிஐக்கு விசாரணையை மாற்றக்கோரி தந்தை மனு: காவல்துறை பதில் தர ஐகோர்ட் உத்தரவு appeared first on Dinakaran.
