எனவே நான் உங்களை கேட்டுக்கொள்வது எல்லாம் நீங்கள் குறைந்தது நான்கு குழந்தைகளை பெற வேண்டும். நான்கு குழந்தைகளுடன் இருக்கும் தம்பதிகளுக்கு பரசுராமர் வாரியம் சார்பில் தலா ரூ.1 லட்சம் விருது வழங்கப்படும். இந்த வாரியத்திற்கு நான் தலைவராக இருந்தாலும் இல்லாவிட்டாலும் பரிசு கொடுக்கப்படும். கல்விக்கு இப்போது அதிக நிதி செலவழிக்க வேண்டியது உள்ளது என்று இளைஞர்கள் என்னிடம் அடிக்கடி கூறுகிறார்கள். எப்படியாவது சமாளித்துக்கொள்ளுங்கள், ஆனால் குழந்தைகளைப் பெற்றெடுப்பதில் தாமதிக்காதீர்கள். இல்லையெனில், மதவெறியர்கள் இந்த நாட்டைக் கைப்பற்றுவார்கள். இவ்வாறு அவர் பேசினார். மபி அரசின் கேபினட் பதவியில் இருக்கும் விஷ்ணு ரஜோரியாவின் பேச்சு சர்ச்சையானதால் அவர் மீண்டும் கூறுகையில்,’ இது எனது தனிப்பட்ட பேச்சு. அரசின் கருத்து அல்ல. இது எனது சமூகத்தில் பேசியது. எனது சமூக திட்டத்தில் வெளியிடப்பட்டது’ என்றார்.
The post மபியில் தான் இந்த பிரசாரம் 4 குழந்தை பெற்றால் ரூ.1 லட்சம் பரிசு: பிராமண நலவாரிய தலைவர் பேச்சால் சர்ச்சை appeared first on Dinakaran.
