அவருக்கு நீச்சல் தெரியாது. உடனே அவரைக் காப்பாற்ற நீந்திச் சென்றேன். அதற்குள் படக்குழுவினர் வந்துவிட்ட நிலையில், அவர்கள் உதவி யுடன் விஜய் ஆண்டனியை மீட்டு, சுயநினைவு இல்லாமல் இருந்த அவரை மருத்துவமனையில் சேர்த்தோம். தீவிர சிகிச்சைக்குப் பிறகு கண் திறந்து பார்த்தார். அப்போது என்னையும் பரிசோதித்த ஒரு டாக்டர், என் முகத்தில் பலத்த காயம் இருப்பதாக கூறினார். என் மூக்கில் எலும்புமுறிவும், நெற்றியில் காயமும் இருந்ததை அப்போது உணர்ந்தேன். உடனே எனக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டது. கடலில் விழுந்த நான், மரணத்தின் எல்லை வரை சென்று வந்தேன். எப்படியோ உயிர் பிழைத்துவிட்டேன். இச்சம்பவத்தை இன்னமும் என்னால் நம்ப முடியவில்லை. விபத்தினால் எனது முகத்தில் ஏற்பட்ட வடுக்கள் அப்படியே இருக்கின்றன. அது வாழ்நாள் முழுவதும் நினைவுபடுத்திக் கொண்டே இருக்கும்.
The post உயிர் பிழைத்து வந்ததை இன்னும் நம்ப முடியவில்லை: காவ்யா தாப்பர் appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.