அவரைத் தொடர்ந்து பேசிய பட ஹீரோயின் கீர்த்தி சனோன், ‘பிரபாஸ் கடவுள் ராமரைப்போல எளிமையான மனிதர். மனதில் தோன்றியதை நேரடியாக பேசக்கூடியவர். படத்தில் சீதை கதாபாத்திரத்தில் நடிக்க என்னை தேர்ந்தெடுத்த இயக்குநருக்கு நன்றி. ஏனென்றால் சில நடிகர்களுக்கு மட்டுமே அவர்களது வாழ்நாளில் இப்படியான கதாபாத்திரத்தில் நடிக்க வாய்ப்பு கிடைக்கும். நான் மிகவும் ஆசீர்வதிக்கப்பட்டதாக உணர்கிறேன். இந்த வேடத்துக்கு நான்தான் பொருத்தமாக இருப்பேன் என படக்குழு நம்பியதும் எனக்கு பெரும் சந்தோஷத்தை கொடுத்தது. மிகுந்த நேர்மையுடனும், நம்பிக்கையுடனும், மரியாதையுடனும் நடிக்க முயற்சித்தேன்.
எனக்கு படத்தின் மீது நம்பிக்கை இருந்தது. நான் கதையை புரிந்துகொண்டபின் படமாக்கப்படும்போது அந்த நம்பிக்கை இன்னும் எனக்குள் அதிகரித்தது’ என்றார்.‘படத்தின் டீசர் வெளியானபோது, பல்வேறு விமர்சனங்கள் எழுந்தன. ஆனால் தற்போது, டிரெய்லர் பார்த்துவிட்டு பலரும் பாராட்டுகிறார்கள். படம் வந்த பிறகு பலரும் இதை கொண்டாடுவார்கள். அந்த அளவுக்கு இதில் உழைப்பை செலுத்தியிருக்கிறோம்’ என இயக்குனர் ஓம் ராவத் கூறினார்.
The post சீதையாக நடித்தது ஆசிர்வாதம்: கீர்த்தி சனோன் நெகிழ்ச்சி appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.