இந்தியாவின் அதிக வருமானம் ஈட்டும் முதல் 10 சதவீதத்தினர், குறைவாக வருமானம் ஈட்டும் கடைசி 10 சதவீதத்தினரைவிட 6.8 மடங்கு அதிகம் சம்பாதிக்கிறார்கள். இது பாகிஸ்தான், வங்கதேசம், பூடான், நேபாளம், மியான்மர் உள்ளிட்ட நாடுகளோடு ஒப்பிடுகையில் முற்றிலும் சமமற்றதாகும். குறைந்த-நடுத்தர வருமானம் கொண்ட நாடுகளில் இந்தியாவும் ஒன்று.
இந்தியாவில் பெரும்பாலான தொழிலாளர்கள் முறைசாரா, குறைந்த ஊதியம் கொண்ட சுயதொழிலில் ஈடுபட்டுள்ளனர். இதனால் ஊதியத்தில் ஏற்றத்தாழ்வு அதிகமுள்ளது. தொழில் முனைவோரை ஊக்குவிப்பதற்காக பிரதமர் உருவாக்கிய பொருளாதாரக் கொள்கையின் விளைவுதான் இது. சாதாரண மக்களுக்கு பக்கோடா, வேண்டப்பட்ட சிலருக்கு மட்டும் அல்வா’ என்று குறிப்பிட்டுள்ளார்.
The post மோடி அரசில் சாதாரண மக்களுக்கு பக்கோடா… வேண்டப்பட்ட சிலருக்கு அல்வா: காங். விமர்சனம் appeared first on Dinakaran.
