2 ஆண்டுக்கு பிறகு வெளியாகும் விஜய் சேதுபதி படம்

சென்னை: வெங்கட கிருஷ்ணா ரோக்நாத் இயக்கத்தில் யாதும் ஊரே யாவரும் கேளிர் படத்தில் விஜய் சேதுபதி நடித்தார். இதில் அவருக்கு ஜோடியாக மேகா ஆகாஷ் நடித்திருந்தார். இந்த படம் 2021ம் ஆண்டு படப்பிடிப்பு முடிந்து, ரிலீசுக்கும் தயாராகி இருந்தது. ஆனால் சில காரணங்களால் படம் தள்ளிப்போனபடி இருந்தது. இதையடுத்து படம் 2022ல் ரிலீசாகும் என கூறப்பட்டது.

ஆனால் அப்போதும் வெளியாகவில்லை. பைனான்ஸ் பிரச்னையில் படம் சிக்கிவிட்டதாக கூறப்பட்டது. இதையடுத்து தற்போது அனைத்து பிரச்னைகளும் தீர்க்கப்பட்டு படத்தை வரும் 19ம் தேதி ரிலீஸ் செய்ய படக்குழு முடிவு செய்திருக்கிறது. இந்த படத்தில் விஜய் சேதுபதியுடன் மேகா ஆகாஷ், விவேக், மகிழ் திருமேனி, ஜெயம் ராஜா நடித்துள்ளனர். இரண்டு ஆண்டுகள் கழித்து படம் திரைக்கு வருவதால் விஜய் சேதுபதி ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

The post 2 ஆண்டுக்கு பிறகு வெளியாகும் விஜய் சேதுபதி படம் appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.

Related Stories: