அப்போது அவர் உருக்கமாகப் பேசியதாவது: ஷூட்டிங் போட்டின் மீது எனது போட் மோதியதில் தலைகீழாக கவிழ்ந்து கடலில் மூழ்கினேன். என் முகம், மூக்கு, தாடையின் உள்பகுதி உடைந்து, நடுக்கடலில் மயங்கி விழுந்தேன். சுயநினைவு இல்லாமல் கடலுக்குள் மூழ்கி உயிருக்குப் போராடிய என்னை காவ்யா தாப்பரும், அசிஸ்டெண்ட் கேமராமேன் ஒருவரும் காப்பாற்றி மருத்துவமனையில் சேர்த்தனர். நான் மறுபிறவி எடுத்து இங்கு வந்து பேசுவதற்கு அவர்கள்தான் காரணம். எனக்கு நீச்சல் தெரியாது. காவ்யா தாப்பருக்கு நீச்சல் தெரியும். அதனால், துணிச்சலுடன் கடலில் குதித்து என்னைக் காப்பாற்றினார். பான் இந்தியா படமான ‘பிச்சைக்காரன் 2’, வரும் 19ம் தேதியன்று திரைக்கு வருகிறது.
The post விபத்துக்குப் பிறகு முதல்முறை பங்கேற்பு மறுபிறவி எடுத்து வந்துள்ளேன்: விஜய் ஆண்டனி உருக்கம் appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.