சிறப்பு காவலர்களை வேலைநிறுத்தத்தில் ஈடுபட தூண்டியதாக 10 காவல் அதிகாரிகள் பணி நீக்கம் செய்யப்பட்டனர். தெலுங்கானா மாநில காவல்துறையில் 33 காவலர்களை சஸ்பெண்ட் செய்தும் டிஜிபி உத்தரவிட்டார். தெலுங்கானாவில் காவலர்கள் வேலைநிறுத்ததில் ஈடுபட்டுள்ள சம்பவம் போலீஸ் துறையில் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நடவடிக்கை எடுக்கப்பட்டபோதிலும் பல்வேறு இடங்களில் காவலர்கள் போராட்டம் தொடர்ந்து நடக்கிறது. வாரங்கல் மற்றும் கொத்தக்குடம் உள்ளிட்ட இடங்களில் காவலர்களின் குடும்பத்தினரும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
The post தெலுங்கானாவில் ஒரே மாநிலம் ஒரே காவல்துறை என்ற கோரிக்கையை வலியுறுத்தி சிறப்பு போலீஸ் படையினர் வேலைநிறுத்தம்..!! appeared first on Dinakaran.