போக்குவரத்து கழக ஓய்வூதியர்கள் ஆர்ப்பாட்டம்

சென்னை: சென்னை, பல்லவன் சாலையில் செயல்படும் போக்குவரத்துக் கழக ஓய்வூதிய அறக்கட்டளையை முற்றுகையிட்டு தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக ஓய்வு பெற்றோர் நல அமைப்பினர் நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அகவிலைப்படி உயர்வு, பணப்பலன், மருத்துவ காப்பீடு உள்ளிட்டவை வழங்கக் வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர். தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீஸார் கைது செய்தனர். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. போராட்டத்தின் முடிவில் பொதுச்செயலாளர் கே.கர்சன் பேட்டி அளித்தார்.

The post போக்குவரத்து கழக ஓய்வூதியர்கள் ஆர்ப்பாட்டம் appeared first on Dinakaran.

Related Stories: