சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களில் நேற்று முன்தினம் மட்டும் குடியிருப்பு பகுதிகளில் பாம்புகள் புகுந்துள்ளதாக 43 அழைப்புகள் அவசர கட்டுப்பாட்டு அறைக்கு வந்தது. தீயணைப்பு வீரர்கள் துரிதமாக செயல்பட்டு நச்சு பாம்புகள் உட்பட 43 பாம்புகளை பிடித்து வனப்பகுதியில் விட்டனர். பெருங்களத்தூர் பகுதியில் வெள்ள நீரால் அடித்து வரப்பட்ட 12 அடி நீளமுள்ள மலைப்பாம்பை தாம்பரம் தீயணைப்பு வீரர்கள் பத்திரமாக மீட்டு வனப்பகுதியில் விட்டனர். தீயணைப்பு வீரர்கள் துரிதமாக செயல்பட்டு 211 நச்சு பாம்புகளையும் பிடித்து வனப்பகுதியில் விட்டனர். இதேபோல் வெள்ளத்தில் சிக்கிய ஆடு, மாடுகளையும் தீயணைப்பு வீரர்கள் மீட்டனர்.
The post கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்தால் அடித்து வரப்பட்டன சென்னை உள்பட மாநிலம் முழுவதும் 211 நச்சு பாம்புகள் மீட்பு: பெருங்களத்தூர் பகுதியில் 12 அடி நீள மலைப்பாம்பு பிடிபட்டது appeared first on Dinakaran.