தூத்துக்குடி மீனவர்கள் இன்று கடலுக்கு செல்ல வேண்டாம்: மீன்வளத்துறை அறிவிப்பு

 

தூத்துக்குடி, அக். 16: வங்கக் கடலில் உருவான காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதியாக நேற்று காலை வலுப்பெற்றுள்ளது. மேலும், ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி, காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று, வட தமிழகம் மற்றும் தெற்கு ஆந்திரம் இடையே கரையை நோக்கி நகரக் கூடும் என்று கணிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதையடுத்து தூத்துக்குடி மாவட்ட மீனவர்கள் இன்று(16ம் தேதி) மீன்பிடிக்க கடலுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறது என்று தூத்துக்குடி மீன்பிடி துறைமுகத்தில் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதனால் விசைப்படகுகள் மீன்பிடிக்க செல்லாமல் தூத்துக்குடி மீன்பிடித் துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

The post தூத்துக்குடி மீனவர்கள் இன்று கடலுக்கு செல்ல வேண்டாம்: மீன்வளத்துறை அறிவிப்பு appeared first on Dinakaran.

Related Stories: