நன்னிலத்தில் அரசின் சாதனைகள் குறித்த புகைப்பட கண்காட்சி ஏராளமான பொதுமக்கள் பார்வையிட்டனர்

 

திருவாரூர், அக். 16: திருவாரூர் மாவட்டம், நன்னிலம் ஒன்றியம் மூலங்குடி என்ற இடத்தில் தமிழக அரசின் சாதனைகள் மற்றும் சிறப்பு திட்டங்கள் குறித்து பொதுமக்கள் அறிந்து கொண்டு பயன்பெறும்வகையில் செய்தி மக்கள் தொடர்புத்துறை சார்பாக புகைப்படக்கண்காட்சியானது நேற்று நடைபெற்றது. இதில், முதல்வர் மு.க.ஸ்டாலின் மூலம் ஏற்கனவே துவக்கி வைக்கப்பட்ட புதிய திட்டங்கள் மற்றும் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கியது குறித்த புகைப்படங்கள் வைக்கப்பட்டிருந்தது. மேலும், தமிழ்நாடு அரசின் பல்வேறு சிறப்பு திட்டங்களான இளைஞர்களுக்கான திறன் மேம்பாட்டு திட்டம் புதிய தொழில் புரிந்துணர்வு ஒப்பந்தம், கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித்திட்டம் உள்ளிட்ட நிகழ்ச்சிகளின் புகைப்படங்கள் மற்றும் தொழில் முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத்துறை அமைச்சர் டி.ஆர்.பி ராஜா, மற்றும் மாவட்டத்தில் பிறதுறைகளின் அமைச்சர்கள் கலந்து கொண்ட நிகழ்ச்சிகளின் புகைப்படங்கள் மற்றும் மாவட்ட கலெக்டர் மூலம் பொது மக்களுக்கு வழங்கப்பட்ட நலத்திட்ட உதவிகள்போன்றவை குறித்த புகைப்படங்கள் இடம் பெற்றிருந்தநிலையில் இதனை ஏராளமான பொதுமக்கள் பார்வையிட்டனர். இதற்கான ஏற்பாடுகளை மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் செல்வகுமார் தலைமையில் அலுவலர்கள் செய்திருந்தனர்.

 

The post நன்னிலத்தில் அரசின் சாதனைகள் குறித்த புகைப்பட கண்காட்சி ஏராளமான பொதுமக்கள் பார்வையிட்டனர் appeared first on Dinakaran.

Related Stories: