புகையிலை, குட்கா பொருட்கள் பதுக்கி வைப்பு மிட்டாய் கடைக்கு சீல்

 

திருத்துறைப்பூண்டி, அக். 16: திருவாரூர் மாவட்டத்தில் கடந்த சில மாதங்களாக தடை செய்யப்பட்ட புகையிலை, ஹான்ஸ், குட்கா பொருள்கள் விற்பனை விற்பனை குறித்து, போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர். திருத்துறைப்பூண்டி நாகை சாலையில் உள்ள மொத்த வியாபாரம் மிட்டாய் கடையில் திருத்துறைப்பூண்டி டிஎஸ்பி பாஸ்கரன் உத்தரவின் பேரில் இன்ஸ்பெக்டர் மாரிமுத்து எஸ்ஐ முத்துக்குமார் உள்ளிட்ட போலீசார் சோதனை மேற்கொண்டனர். அப்போது அரசால் தடை செய்யப்பட்ட ஹான்ஸ், புகையிலை பொருட்கள் பதுக்கி வைத்திருந்த ராஜாராமன் என்பவரை போலீசார் கைது செய்தனர். தொடர்ந்து, எஸ்.ஐ. முத்துக்குமார் முன்னிலையில் உணவு பாதுகாப்பு துறை அதிகாரி அழகுவேல் தலைமையிலான உணவுப் பாதுகாப்பு அலுவலர்கள் அந்த கடைக்கு சீல் வைத்தனர்.

The post புகையிலை, குட்கா பொருட்கள் பதுக்கி வைப்பு மிட்டாய் கடைக்கு சீல் appeared first on Dinakaran.

Related Stories: