தாலுகா அலுவலகங்களில் 19ம் தேதி பொதுவிநியோகத்திட்ட சிறப்பு முகாம்

 

தூத்துக்குடி, அக். 16: தாலுகா அலுவலகங்களில் வரும் 19ம் தேதி (சனிக்கிழமை) பொது விநியோகத் திட்டத்தின் கீழ் சிறப்பு முகாம் நடைபெற உள்ளதாக மாவட்ட கலெக்டர் இளம்பகவத் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: பொது விநியோகத்திட்டம் சிறப்பாக நடைபெற, பொது விநியோகத் திட்டத்தின் கீழ் அக்டோபர் மாதத்திற்கான சிறப்பு முகாம், வரும் 19ம் தேதி (சனிக்கிழமை) காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை, அந்தந்த வட்டங்களில் தாசில்தார் அலுவலகங்களில் நடைபெற உள்ளது. இந்த முகாமில் மின்னணு குடும்ப அட்டையில் முகவரி மாற்றம், பெயர் திருத்தங்கள், உறுப்பினர் சேர்த்தல் மற்றும் நீக்குதல், புதிய குடும்ப அட்டை, நகல் அட்டை கோருதல் போன்ற குறைகள் முகாமில் சரிசெய்து வழங்கப்பட உள்ளது. மேலும் மின்னணு குடும்ப அட்டைகளுக்குரிய தவறுகளில் குடும்பத் தலைவரின் புகைப்படம் பதிவேற்றம் செய்ய வேண்டியிருப்பின் முகாமிலேயே புகைப்படம் பதிவேற்றம் செய்யப்படும். பொது விநியோகத்திட்டம் தொடர்பான குறைகளையும் தெரிவித்து பொதுமக்கள் பயன்பெற்றுக் கொள்ளலாம்.
எனவே பொதுமக்கள் இந்த சிறப்பு முகாமில், மனு செய்து பயன்பெறலாம். இவ்வாறு கூறியுள்ளார்.

The post தாலுகா அலுவலகங்களில் 19ம் தேதி பொதுவிநியோகத்திட்ட சிறப்பு முகாம் appeared first on Dinakaran.

Related Stories: