அரசு பள்ளிகளில் காலை உணவு திட்டம் அதிகாரிகள் ஆய்வு

 

செய்யாறு, அக்.16: செய்யாறு, வெம்பாக்கம், அனக்காவூர் ஒன்றியங்களில் உள்ள கிராமப்புறங்களில் அரசு பள்ளிகளில் காலை சிற்றுண்டி உணவு திட்டத்தை 9 துறைகளைச் சேர்ந்த அதிகாரிகள் நேற்று ஆய்வு செய்தனர். அதன்படி வெம்பாக்கம் ஊராட்சி ஒன்றிய கிராமப் பகுதிகளில் உள்ள அரசு பள்ளிகளில் செயல்படுத்தப்பட்டு வரும் 112 மையங்களில் 9 துறை சேர்ந்த பணியாளர்கள் கொண்டு நேற்று வட்டார வளர்ச்சி அலுவலர்கள் தி.மயில்வாகனன், ஆ.ஷீலாஅன்பு மலர் ஆகியோர் தலைமையிலான குழுவினர் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.

இவ்வொன்றியம் 1 முதல் 5ம் வகுப்பு வரை பயிலும் மொத்தம் 5019 மாணவ, மாணவியர்களில் 93 சதவீத மாணவ மாணவியர்கள் காலை சிற்றுண்டி விரும்பி உண்டுள்ளனர். அதேபோல் செய்யாறு ஊராட்சி ஒன்றிய கிராமப் பகுதிகளில் உள்ள அரசு பள்ளிகளில் செயல்படுத்தப்பட்டு வரும் 86 மையங்களில் 9 துறை சேர்ந்த பணியாளர்கள் கொண்டு நேற்று வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ஜா.கிரிஜா, த.ராஜன்பாபு ஆகியோர் தலைமையிலான குழுவினர் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.

The post அரசு பள்ளிகளில் காலை உணவு திட்டம் அதிகாரிகள் ஆய்வு appeared first on Dinakaran.

Related Stories: