மணல் கொள்ளை குறித்து போலீசுக்கு தகவல் கொடுத்ததால் மின்சாரம் பாய்ச்சி திமுக பிரமுகரின் மகன் கொடூரக்கொலை

 

பேரணாம்பட்டு அருகே மணல் கொள்ளை போலீசுக்கு தகவல் கொடுத்ததால், மின்சாரம் பாய்ச்சி திமுக பிரமுகரின் மகன் கொலை செய்யப்பட்டுள்ளார். இதனால் குற்றவாளிகளை கைது செய்யக்கோரி உறவினர்கள் மறியலில் ஈடுபட்ட சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டது.
வேலூர் மாவட்டம், பேரணாம்பட்டு அடுத்த குண்டலப்பல்லி ஊராட்சிக்குட்பட்ட பண்டலதொட்டி கிராமத்தை சேர்ந்தவர் சீனிவாசன்(50). இவர் ஒன்றிய திமுக அவைத்தலைவராகவும், ஒப்பந்ததாரராகவும் உள்ளார். இவரது 3வது மகன் பிரசாந்த்(20), அதே பகுதியில் உள்ள அவர்களுக்கு சொந்தமான நிலத்தில் விவசாயம் செய்து வந்தார். இந்நிலையில் கடந்த கடந்த 12ம் தேதி காலை நிலத்திற்கு சென்ற பிரசாந்த், இரவு ஆகியும் வீட்டிற்கு வரவில்லை. அவரை பல இடங்களில் தேடியும் கிடைக்காததால், சீனிவாசன் பேரணாம்பட்டு காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து தேடி வந்தனர்.

இந்நிலையில, நேற்று காலை அதேபகுதியில் உள்ள ஒரு விவசாய நிலத்தில் பிரசாந்த் பம்ப் செட் ஓரம் தலையில் அடிபட்டு கால்களில் கம்பிகள் சுற்றப்பட்ட நிலையில் இறந்து கிடந்தார். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த அப்பகுதி மக்கள் கொடுத்த தகவலின்பேரில், விரைந்து வந்த பேரணாம்பட்டு இன்ஸ்பெக்டர் ருக்மாங்கதன் மற்றும் போலீசார், உடலை கைப்பற்ற முயன்றபோது உறவினர்களும், பொதுமக்களும் முற்றுகையிட்டு சடலத்தை தர மறுத்தனர். மேலும், பிரசாந்த்தை மின்சாரம் பாய்ச்சி கொலை செய்துள்ளனர். அவர்களை உடனடியாக கைது செய்ய வேண்டும் எனக்கூறி போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து குற்றவாளிகளை கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தி பேரணாம்பட்டு- வீ.கோட்டா சந்திப்பு சாலையில் சடலத்துடன் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

The post மணல் கொள்ளை குறித்து போலீசுக்கு தகவல் கொடுத்ததால் மின்சாரம் பாய்ச்சி திமுக பிரமுகரின் மகன் கொடூரக்கொலை appeared first on Dinakaran.

Related Stories: