புட்லூர் – செவ்வாப்பேட்டை சேதமடைந்த சாலையை சீரமைக்க வேண்டும்

 

திருவள்ளூர்: திருவள்ளூர் அடுத்த புட்லூரில் இருந்து செவ்வாப்பேட்டைக்கு செல்லும் 4 கிலோ மீட்டர் தூரம் சேதமடைந்த சாலையை சீரமைக்க ேவண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது. திருவள்ளூர், காக்களூர் ஆகிய பகுதிகளில் இருந்து புட்லூர் ரயில்வே மேம்பாலம் வழியாக செவ்வாப்பேட்டைக்கு பள்ளிக்கு செல்லும் மாணவ, மாணவிகள், பொதுமக்கள் என நாள் தோறும் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் சென்று வருகின்றனர்.

இந்நிலையில், கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு போடப்பட்ட இந்த சாலை தற்போது 4 கிலோ மீட்டர் தூரத்திற்கும் முழுவதும் சேதமடைந்து போக்குவரத்திற்கு லாயக்கற்றதாக உள்ளது. இந்த சாலை முழுவதும் சேதமடைந்து ஜல்லிக்கற்கள் வெளியே பெயர்ந்து இருப்பதால் இருசக்கர வாகனங்களில் செல்பவர்கள் தவறி விழுந்து காயம் ஏற்படும் சூழ்நிலை அதிக அளவில் உள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் சிரமப்பட்டு செல்ல வேண்டிய நிலைமை இருப்பதால் 4 கிலோ மீட்டர் தூரத்திற்கு உள்ள சாலையை சீரமைக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் மாவட்ட கலெக்டருக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

The post புட்லூர் – செவ்வாப்பேட்டை சேதமடைந்த சாலையை சீரமைக்க வேண்டும் appeared first on Dinakaran.

Related Stories: