திறந்தவெளியில் நெமிலி அரசுப்பள்ளி சுற்றுச்சுவர் அமைக்க பெற்றோர் கோரிக்கை

 

திருத்தணி, அக்.14: திறந்த நிலையில் உள்ள நெமிலி அரசு உயர்நிலைப் பள்ளிக்கு சுற்றுச்சுவர் அமைக்க வேண்டும் என்று மாணவர்களின் பெற்றோர் அரசுக்கு கோரிக்கை விடுத்தனர்.திருவள்ளூர் மாவட்டம், திருவாலங்காடு ஒன்றியம் நெமிலி அரசு உயர்நிலைப் பள்ளியில் 500க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் படித்து வருகின்றனர். கிராமத்திற்கு அருகில் உள்ள விவசாய நிலப் பகுதியில் அமைந்துள்ள பள்ளிக்கு இதுவரை சுற்றுச்சுவர் அமைக்கப்படவில்லை.

இதனால், பள்ளியை சுற்றி முட்புதர்கள், செடி,கொடிகள் போன்றவை அடர்த்தியாக வளர்ந்துள்ளதால், விஷ பூச்சிகள் அடிக்கடி பள்ளி வகுப்பறைகளில் புகுந்து விடுகிறது. இதனால், மாணவரகள் மற்றும் ஆசிரியர்கள் அச்சத்துடன் பள்ளிக்கு சென்று வருகின்றனர்.  மேலும், பள்ளிக்கு செல்லும் மண் சாலை மழை காலங்களில் சேறும் சகதியுமாக இருப்பதால், மாணவர்கள் அவ்வழியாக சென்று வர சிரமப்படுகின்றனர். எனவே, மாவட்ட கலெக்டர் உரிய நடவடிக்கை எடுத்து பள்ளிக்கு சுற்றுச்சுவர் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.

The post திறந்தவெளியில் நெமிலி அரசுப்பள்ளி சுற்றுச்சுவர் அமைக்க பெற்றோர் கோரிக்கை appeared first on Dinakaran.

Related Stories: