உத்தரகாண்டில் ரயில் விபத்தை ஏற்படுத்த சதி; தண்டவாளத்தில் காலி காஸ் சிலிண்டர் மீட்பு

ரூர்க்கி: உத்தரகாண்ட் மாநிலம் லக்சர் – ரூர்க்கி ரயில் பாதைக்கு உட்பட்ட கண்டோன்மென்ட் அருகே உள்ள புச்சாடி ரயில் பாதையில் இன்று காலை 7.45 மணியளவில் 3 கிலோ எடையுள்ள காலி கேஸ் சிலிண்டர் ஒன்று கிடந்தது. அப்பகுதி மக்கள் பார்த்து, தண்டேரா ஸ்டேஷன் மாஸ்டருக்கு தகவல் கொடுத்தனர். அவர்கள் சம்பவ இடத்திற்கு வந்து காலி காஸ் சிலிண்டரை கைப்பற்றி விசாரித்து வருகின்றனர். இவ்விவகாரம் தொடர்பாக ஜிஆர்பி மற்றும் கோட்வாலி போலீசார் வழக்குபதிந்து விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.

இதுகுறித்து போலீஸ் அதிகாரிகள் கூறுகையில், ‘சரக்கு ரயிலின் பைலட், தண்டவாளத்தில் காஸ் சிலிண்டர் கிடப்பதாக ரயில்வே பாதுகாப்புப் படையினருக்குத் தெரிவித்தார். சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார், தண்டவாளத்தில் கிடந்த மூன்று கிலோ எடையுள்ள காலி காஸ் சிலிண்டர் கைப்பற்றினர். ரயில்வே தண்டவாளத்தின் மறுபுறம் ராணுவ குடியிருப்பு பகுதியின் சுவர் உள்ளது.

புகழ்பெற்ற ஐஐடி கல்லூரி, பிஇஜி சென்டர் மற்றும் புகழ்பெற்ற தர்கா பிரான் காளியாருக்கு வருபவர்கள் ரயில்கள் மூலம் ரூர்க்கி ரயில் நிலையத்தை அடைவதால், ரூர்க்கி ரயில் நிலையம் மிகவும் முக்கியமானதாகக் கருதப்படுகிறது. ரூர்க்கி ரயில் நிலையம் அருகே தண்டவாளத்தில் காலி கேஸ் சிலிண்டர் கண்டெடுக்கப்பட்டது குறித்து பல்வேறு கோணங்களில் விசாரிக்கப்பட்டு வருகிறது. ரயிலை கவிழ்க்க நடத்தப்பட்ட சதியா என்பது குறித்தும் தீவிரமாக விசாரிக்கப்படுகிறது.

The post உத்தரகாண்டில் ரயில் விபத்தை ஏற்படுத்த சதி; தண்டவாளத்தில் காலி காஸ் சிலிண்டர் மீட்பு appeared first on Dinakaran.

Related Stories: