சாப்பிட்டவர்கள் உயிரோடு இருக்கிறார்கள் திருப்பதி லட்டு பிரச்னை திசை திருப்பும் செயல்: சொல்கிறார் சீமான்

திருப்புத்தூர்: நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், சிவகங்கை மாவட்டம், திருப்புத்தூரில் நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது: திருப்பதி லட்டில் விலங்கு கொழுப்பு இருப்பதாக கூறப்படும் புகாரில் தவறு யார் செய்தார்கள் என்று விசாரிக்க வேண்டும். இது நாட்டின் பொது பிரச்னை போல் கொண்டு போறது நல்லதல்ல.

சாப்பிட்டவர்கள் எல்லாம் உயிருடன் இருக்கிறார்கள். அதில் ஒன்றும் பிரச்னை இல்லை. நாட்டில் எவ்வளவோ பிரச்னை இருக்கிறது. இதை ஏன் பெரிதுபடுத்துகிறார்கள் என்று தெரியவில்லை. இது மக்களை திசை திருப்பும் செயலாகும்.
இவ்வாறு தெரிவித்தார்.

The post சாப்பிட்டவர்கள் உயிரோடு இருக்கிறார்கள் திருப்பதி லட்டு பிரச்னை திசை திருப்பும் செயல்: சொல்கிறார் சீமான் appeared first on Dinakaran.

Related Stories: