சிறுமியை கர்ப்பமாக்கிய லாரி ஓட்டுநர் மீது போக்சோ வழக்கு

விழுப்புரம், செப். 13: விழுப்புரம் அருகே ஒரு கிராமத்தைச் சேர்ந்த 16 வயது சிறுமி வளவனூர் பகுதியில் உள்ள தனது பாட்டி வீட்டிற்கு சென்றுள்ளார். அப்போது அதே பகுதியைச் சேர்ந்த மணிகண்டன் என்ற வாலிபர் சிறுமியை காதலித்துள்ளார். தொடர்ந்து சிறுமியை திருமணம் செய்து கொண்ட நிலையில் நிறைமாத கர்ப்பிணியாக உள்ள அவர் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு பரிசோதனைக்கு வந்துள்ளார். அப்போது சிறுமி கர்ப்பம் அடைந்தது குறித்து டாக்டர்கள் விசாரித்தனர். இதுகுறித்து விழுப்புரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் அளித்த புகாரின்பேரில் லாரி டிரைவர் மணிகண்டன் மீது போக்சோ வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post சிறுமியை கர்ப்பமாக்கிய லாரி ஓட்டுநர் மீது போக்சோ வழக்கு appeared first on Dinakaran.

Related Stories: