கறம்பக்குடி அருகே அனுமதியின்றி மது பானம் விற்ற முதியவர் கைது

 

கறம்பக்குடி, செப்.18: கறம்பக்குடி அருகே அனுமதியின்றி மது பானம் விற்ற முதியவரை போலீசார் கைது செய்தனர். புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி அருகே திருவோணம் தேரடி வீதி பகுதியை சேர்ந்தவர் பெருமாள் (65). இவர் அனுமதியின்றி மது பானம் விற்பதாக கறம்பக்குடி காவல் துறைக்கு வந்த தகவலை அடுத்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

அப்போது எஸ்ஐ மாதேஸ்வரன் தலைமையில் போலீசார் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது முதியவர் பெருமாள் அரசு அனுமதியின்றி கறம்பக்குடி குட்டை குளம் அருகே விற்பனை செய்து கொண்டிருந்த போது அவரிடம் இருந்து 27 மது பான பாட்டில்களை பறிமுதல் செய்தனர். மேலும், போலீசார், பெருமாள் மீது வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

The post கறம்பக்குடி அருகே அனுமதியின்றி மது பானம் விற்ற முதியவர் கைது appeared first on Dinakaran.

Related Stories: