திருவேங்கடம் அருகே புகையிலை பொருட்கள் விற்ற கடைக்கு சீல்

திருவேங்கடம்,செப்.13: திருவேங்கடம் அருகே கீழ திருவேங்கடம் வடக்கு பாறைப்பட்டி தன்னாசி மகன் கருப்பசாமி (50). இவர் சிவகாசி மெயின் ரோட்டில் டீக்கடை நடத்தி வருகிறார். இதில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை விற்பனை செய்வதாக திருவேங்கடம் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் திருவேங்கடம் எஸ்ஐ சஞ்சய் காந்தி மற்றும் போலீசார் டீக்கடையில் சோதனை நடத்தினர். அப்போது தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனைக்காக பதுக்கி வைத்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து கருப்பசாமியை போலீசார் கைது செய்தனர். இதையடுத்து சங்கரன்கோவில் உணவு பாதுகாப்பு துறை அதிகாரி உபாசனா கடைக்கு நேரில் வந்து புகையிலை விற்ற கடைக்கு சீல் வைத்தனர்.

The post திருவேங்கடம் அருகே புகையிலை பொருட்கள் விற்ற கடைக்கு சீல் appeared first on Dinakaran.

Related Stories: