* ஆந்திர மாநிலம் ஆனந்தபூரில் நடைபபெறும் துலீப் கோப்பை டெஸ்ட் தொடரின் முதல் நாளான நேற்று இந்தியா ஏ, டி அணிகளுக்கு இடையிலான ஆட்டத்தில் ஏ அணி ஆட்ட நேர முடிவில் 8விக்கெட் இழப்புக்கு 288ரன் எடுத்துள்ளது. இந்திய பி, சி அணிகளுக்கு இடையிலான ஆட்டத்தில் முதல் நாள் ஆட்ட நேர முடிவில் சி அணி 5 விக்கெட் இழந்து 357ரன் குவித்துள்ளது. ஏ அணியில் இஷான் கிஷண் 111, பாபா இந்தரஜித் 78, சாய் சுதர்சன் 43ரன் எடுத்தனர்.
* ஆப்கானிஸ்தான்-நியூசிலாந்து இடையிலான நொய்டா டெஸ்ட் ஆட்டம், தொடர்ந்து 4வது நாளாக நேற்றும் மழை, ஆடகளத்தின் தன்மை காரணமாக கைவிடப்பட்டது.
* மெக்சிகோவில் நடைபெறும் குவாதலஜாரா ஓபன் டென்னிஸ் காலிறுதி ஆட்டத்தில் மெக்சிகோ வீராங்கனை கமிலா ஒசோரியா, ரஷ்ய வீராங்கனை கமில்லா ராகிமோவா ஆகியோர் இன்று மோதுகின்றனர்.