மாவட்ட எஸ்பி அதிரடி குறைதீர் கூட்டத்துக்கு மக்கள் வராததால் கலெக்டர் அலுவலகம் வெறிச்சோடியது

 

கரூர், செப்.3: கரூர் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்ற மக்கள் குறைதீர் நாள் கூட்டத்திற்கு அதிகளவு மக்கள் வராத காரணத்தினால் வெறிச்சோடியே காணப்பட்டது. வாரந்தோறும் திங்கள் கிழமை நாட்களில் கரூர் கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர் நாள் கூட்டம் நடத்தப்பட்டு வருகிறது. இந்த நாளில், மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பொதுமக்கள் கோரிக்கை மனுக்களுடன் வந்து மனு அளித்து சென்று வருகின்றனர்.

இந்நிலையில், நேற்று மக்கள் குறைதீர் நாள் கூட்டம் நடைபெற்றது. வழக்கமாக, அதிகளவு வந்து செல்லும் நிலையில், சுட்டெரிக்கும் வெயில் போன்ற சில காரணங்களால் 15 நாள் இடைவெளிக்கு பிறகு நேற்று நடைபெற்ற மக்கள் குறைதீர் நாள் கூட்டத்திற்கு அதிகளவு மக்கள் கலெக்டர் அலுவலகம் வரவில்லை. இதன் காரணமாக பரபரப்புடன் காணப்படும் கலெக்டர் அலுவலகம் மக்கள் வரத்தின்றி வெறிச்சோடியே காணப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது

The post மாவட்ட எஸ்பி அதிரடி குறைதீர் கூட்டத்துக்கு மக்கள் வராததால் கலெக்டர் அலுவலகம் வெறிச்சோடியது appeared first on Dinakaran.

Related Stories: