கிருஷ்ணராயபுரம் அரசு மருத்துவமனையில் உலக தற்கொலை தடுப்பு தினம்

 

கிருஷ்ணராயபுரம், செப்.11: கிருஷ்ணராயபுரம் அரசு மருத்துவமனையில் ‘உலக தற்கொலை தடுப்பு தினம்’ உறுதிமொழி ஏற்பு நடந்தது. கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் அரசு மருத்துவமனையில் உலக தற்கொலை தடுப்பு தினத்தையொட்டி, நடந்த நிகழ்ச்சிக்கு டாக்டர் கோபி கிருஷ்ணன் தலைமை தாங்கினார். வீராச்சாமி முன்னிலை வகித்தார். மருத்துவமனை பணியாளர்கள், நோயாளிகள் மற்றும் பொதுமக்கள் ஆகியோர் தற்கொலைக்கு எதிரான உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.

மன அழுத்தம், தூக்கமின்மை போன்றவைகளால் தற்கொலை செய்து கொள்ளும் எண்ணம் தோன்றும். அதற்கு, அரசு மருத்துவமனை மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் மனநல ஆலோசனை மையம் மூலம் உரிய ஆலோசனை பெற்றால் அதிலிருந்த விடுபட முடியும் என மனநல மனநல ஆலோசகர் மனோஜ், மருத்துவமனை செவிலியர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

The post கிருஷ்ணராயபுரம் அரசு மருத்துவமனையில் உலக தற்கொலை தடுப்பு தினம் appeared first on Dinakaran.

Related Stories: