வேலாயுதம்பாளையம் அருகே பெட்டிக்கடையில் 400 கிராம் குட்கா பறிமுதல்

 

கரூர், செப்.13: கரூர் மாவட்டத்திற்குட்பட்ட வேலாயுதம்பாளையம் அருகே பெட்டிக்கடையில் குட்கா புகையிலை பொருட்களை பதுக்கி வைத்து விற்பனை செய்ய முயன்றதாக ஒருவர் மீது போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர். கரூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் குட்கா புகையிலைப் பொருட்கள் விற்பனை செய்யப்படுவது சம்பந்தமாக, அந்தந்த காவல் நிலைய போலீசார், மதுவிலக்கு போலீசார் இணைந்து கடந்த சில மாதங்களாக தீவிர சோதனை மேற்கொண்டு வழக்கு பதிந்து வருகின்றனர்.

மேலும், கரூர் மாவட்ட எஸ்பி உத்தரவின்பேரில், குட்கா பொருட்கள் விற்பனை சம்பந்தமாக தனிப்படை அமைக்கப்பட்டு சோதனை நடத்தப்பட்டு வருகிறது. நேற்றுமுன்தினம், கரூர் மாவட்டம், வேலாயுதம்பாளையம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட புஞ்சைபுகளூர் பகுதியில் உள்ள பெட்டிக்கடையில் போலீசார் சோதனை மேற்கொண்டனர். அப்போது 400 கிராம் எடையுள்ள குட்கா பொருட்களை விற்பனைக்கு வைத்திருந்ததை பறிமுதல் செய்து, விற்பனை செய்ய முயன்ற ஒருவர் மீது வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

The post வேலாயுதம்பாளையம் அருகே பெட்டிக்கடையில் 400 கிராம் குட்கா பறிமுதல் appeared first on Dinakaran.

Related Stories: