வினோபாஜிபுரம் பகுதியில் வழங்கப்பட்ட 40 வீடுகளுக்கு பட்டா கோரி மனு

 

கரூர், செப். 10: கரூர் மாவட்டம் தரகம்பட்டி வினோபாஜிபுரம் பகுதியில் தனியார் அறக்கட்டளை வழங்கப்பட்ட 40 வீடுகளுக்கு பட்டா வழங்கக் கோரி பயனாளிகள் கலெக்டர் அலவலகத்தில் மனு அளித்தனர். மனு விவரம் வருமாறு: தரகம்பட்டி வினோபாஜிபுரம் பகுதியில் ஒரு தனியார் அறக்கட்டளை சார்பில் 40க்கும் மேற்பட்டோருக்கு வீடு கட்டித் தரப்பட்டது.

அந்த வீட்டிற்கான பட்டா இதுநாள் வரை பயனாளிகளுக்கு கிடைக்கவில்லை. இதனால், வீட்டில் அடிப்படை வசதிகள் உட்பட பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்படாத நிலையே உள்ளன. எனவே, அந்த வீடுகளின் பயனாளிகளுக்கு பட்டா வழங்கத் தேவையான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என கலெக்டர் அலுவலகத்தில் அளித்த மனுவில் தெரிவித்துள்ளனர்.

 

The post வினோபாஜிபுரம் பகுதியில் வழங்கப்பட்ட 40 வீடுகளுக்கு பட்டா கோரி மனு appeared first on Dinakaran.

Related Stories: