கிருஷ்ணராயபுரம் தொகுதியில் 10 ஊராட்சிகளுக்கு விளையாட்டு உபகரணங்கள்

 

கிருஷ்ணராயபுரம், செப்.11: கிருஷ்ணராயபுரம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஊராட்சிகளுக்கு கலைஞரின் விளையாட்டு உபகரணங்களை சிவகாமசுந்தரி எம்எல்ஏ வழங்கினார். கிருஷ்ணராயபுரம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நடந்த நிகழ்ச்சியில் பிடிஓ முருகேசன் வரவேற்றார். யூனியன் சேர்மன் சுமித்ரா தேவி முன்னிலை வகித்தார். எம்எல்ஏ சிவகாமசுந்தரி தலைமை தாங்கி, மகாதானபுரம், கம்மநல்லூர், மனவாசி, ரங்கநாதபுரம், பால்ராஜபுரம், சேங்கல், மத்துரங்கம்பட்டி உட்பட்ட 10 ஊராட்சிகளுக்கு தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டுத் துறையின் மூலமாக கிரிக்கெட் பேட், கேரம் போர்டு, சிலம்பு தடி உட்பட 32 வகையான விளையாட்டு உபகரணங்களை ஊராட்சித் தலைவர்களிடம் வழங்கினார். வட்டார வளர்ச்சி அலுவலர் முருகேசன் வரவேற்றார்.

எம்எல்ஏ பேசுகையில், திமுக ஆட்சியில் ஊராட்சிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு அதிகளவு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு வளர்ச்சிப் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஊராட்சி தலைவர்கள் குடிநீர் பிரச்சனைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். இன்னும் இரண்டு மாதங்களில் உள்ளாட்சி தேர்தல் வர உள்ளதால் தலைவர்கள் தயாராக வேண்டும் என்றார். நிகழ்ச்சியில், கிருஷ்ணராயபுரம் திமுக மேற்கு ஒன்றிய செயலாளர் ரவி ராஜா, ஊராட்சி தலைவர்கள் பாலராஜபுரம் வசந்தி, சித்தலவாய் பழனியப்பன்,முத்துரெங்கம்பட்டி மாரிமுத்து, ஒன்றிய கவுன்சிலர்கள் மோகன்ராஜ், உஷா, லீலாவதி மற்றும் ஊராட்சி செயலாளர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

The post கிருஷ்ணராயபுரம் தொகுதியில் 10 ஊராட்சிகளுக்கு விளையாட்டு உபகரணங்கள் appeared first on Dinakaran.

Related Stories: