ஜனவரியில் ஏழுமலையானை தரிசிக்க 40 நிமிடங்களில் 4.60 லட்சம் பக்தர்கள் முன்பதிவு

திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ஜனவரி மாதம் சுவாமி தரிசனம் செய்வதற்காக ஆன்லைனில் ₹300 சிறப்பு நுழைவு தரிசன டிக்கெட்டுகள் இன்று காலை 9 மணிக்கு தேவஸ்தான இணையதளத்தில் வெளியிடப்பட்டது. ஜனவரி மாதம் டிக்கெட் கோட்டாவின் கீழ், 4 லட்சத்து 60 ஆயிரம் டிக்கெட்டுகள் வெளியிடப்பட்டன. இந்த டிக்கெட்டுகளை பெறுவதற்காக ஒரே நேரத்தில் 14 லட்சம் பேர் தேவஸ்தான இணையதளத்தில் முயற்சி செய்தனர்.இருப்பினும் கிளவுட் சிஸ்டம் மேனேஜ்மென்ட் திட்டத்தின் மூலம் டிக்கெட் முன்பதிவு செய்யப்பட்டதால் சர்வர் பிரச்சனை ஏற்படாமல் பக்தர்கள் டிக்கெட் முன்பதிவு செய்தனர். ஆன்லைனில் டிக்கெட் வெளியிடப்பட்ட 22 நிமிடங்களில் 3 லட்சத்து 20 ஆயிரம் டிக்கெட்டுகளை பக்தர்கள் முன்பதிவு செய்தனர். 40வது நிமிடத்தில் 4.60 லட்சம் டிக்கெட்களும் முன்பதிவு செய்யப்பட்டது….

The post ஜனவரியில் ஏழுமலையானை தரிசிக்க 40 நிமிடங்களில் 4.60 லட்சம் பக்தர்கள் முன்பதிவு appeared first on Dinakaran.

Related Stories: