சுமார் 4 கி.மீ. தூரம் வரையிலான பெரியமாடு போட்டியில் 12 மாட்டு வண்டிகள் கலந்துகொண்டன. இதில் தூத்துக்குடியை சேர்ந்த விஜயகுமாரின் மாடுகள் முதலிடமும், ராமநாதபுரம் மாவட்டம், மேலச்செல்வனூர், வீரக்குடி முருகய்யனாரின் மாடுகள் 2ம் இடமும், புதுக்கோட்டை மணியின் மாடுகள் 3ம் இடமும் பெற்றன. இதேபோல, சுமார் 3 கி.மீ. தூரம் நடந்த சின்னமாடு போட்டியில் 16 மாட்டு வண்டிகள் கலந்துகொண்டன. இதில் ராமநாதபுரம் சித்திரங்குடி ராமமூர்த்தியின் மாடுகள் முதலிடமும், தூத்துக்குடி விஜயகுமாரின் மாடுகள் 2ம் இடமும், தளவாய்குளம் ராமரின் மாடுகள் 3ம் இடமும் பெற்றன. வெற்றிபெற்ற மாடுகளின் உரிமையாளர்கள், சாரதிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. போட்டியை கடலாடி மற்றும் சுற்றுவட்டார கிராம மக்கள் ஏராளமானோர் கண்டு ரசித்தனர்.
The post கடலாடி அருகே மாட்டு வண்டி பந்தயத்தில் சீறிப்பாய்ந்த காளைகள் appeared first on Dinakaran.