விஜயகாந்த் பிறந்தநாள் விழாவில் மின்சாரம் பாய்ந்து தேமுதிக நிர்வாகி உயிரிழப்பு

பண்ருட்டி: கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே நடுக்குப்பத்தை சேர்ந்தவர் வெங்கடேசன், தேமுதிக கிளை செயலாளர். இவர் நேற்று காலை கட்சி பிரமுகர்களுடன் நடுக்குப்பம் ஏரிக்கரையில் விஜயகாந்த் பிறந்தநாள் விழாவையொட்டி, பழைய கொடிக்கம்பத்தை புதுப்பித்து நடும்போது எதிர்பாராத விதமாக சாலையின் எதிரே இருந்த மின்கம்பியில் கொடிக்கம்பம் சாய்ந்து மின்சாரம் பாய்ந்தது. இதில் வெங்கடேசன், மதியழகன், பிரகாஷ், செல்வகுமார், பழனிவேல், செல்வம் ஆகியோர் படுகாயம் அடைந்தனர்.

இதை பார்த்து அருகில் இருந்தவர்கள் படுகாயமடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக பண்ருட்டி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் வெங்கடேசன் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். மற்றவர்கள் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தகவலின் பேரில், முத்தாண்டிக்குப்பம் போலீசார் வழக்குபதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

The post விஜயகாந்த் பிறந்தநாள் விழாவில் மின்சாரம் பாய்ந்து தேமுதிக நிர்வாகி உயிரிழப்பு appeared first on Dinakaran.

Related Stories: