இரட்டை வேடத்தில் நடிக்க ஆசை: ஸ்ருதிஹாசன்

சென்னை: பிரசாந்த் நீல் இயக்கும் ‘சலார்’ என்ற பான் இந்தியா படத்தில் பிரபாஸ் ஜோடியாக நடித்து முடித்துள்ள ஸ்ருதிஹாசன், ‘தி ஐ’ என்ற ஹாலிவுட் படத்தில் நடிக்கிறார். அவர் கூறியதாவது: எங்கள் உறவினர் மணிரத்னம் இயக்கத்தில் நடிக்க வாய்ப்பு வந்தது. சில வருடங்களுக்கு முன்பு ‘பொன்னி யின் செல்வன்’ படத்தின் ஆரம்பநிலை பேச்சுவார்த்தை நடந்த நேரம் அது. ஆனால், அப்போது படத்தின் ஷூட்டிங் தொடங்கவில்லை. நானும் வெவ்வேறு மொழிகளில் நிறைய படங்களில் நடித்து வந்ததால், பிறகு அப்படம் குறித்து யோசிக்கவில்லை.

36 வருடங்களுக்குப் பிறகு மணி ரத்னம் இயக்கத்தில் மீண்டும் எனது தந்தை கமல்ஹாசன் நடிக்கிறார். இதை ரசிகர்களைப் போல் நானும் ஆவலுடன் எதிர்பார்க்கிறேன். எனது தந்தை நடித்த படங்கள் எனக்குப் பிடிக்கும் என்றாலும், ‘நாயகன்’ படம் ெராம்ப ஸ்பெஷல். மீண்டும் அந்தக் கூட்டணி இணையும் படத்தின் கதை பற்றி எனக்கு எதுவும் தெரியாது. அதில் என்னை நடிக்க அழைப்பார்களா என்றுகூட யோசித்ததில்லை. இதுவரை கமல்ஹாசன் படத்தில் நான் நடித்ததில்லை. அதற்கான வாய்ப்பு விரைவில் அமையும் என்று நம்புகிறேன். அதுபோல், இரட்டை வேடத்திலும் நான் நடித்ததில்லை. அதுபோல் ஒரு கதை அமைந்தால் நடிப்பேன். நிறைய கதைகள் எழுதி வைத்திருக்கிறேன். ஆனால், படம் இயக்கும் எண்ணம் இல்லை.

The post இரட்டை வேடத்தில் நடிக்க ஆசை: ஸ்ருதிஹாசன் appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.

Related Stories: