சூர்யாவுடன் பேசியது என்ன?: சச்சின் பதில்

மும்பை: மும்பையில் முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கரை சூர்யா நேரில் சந்தித்தார். அப்போது அவருடன் சேர்ந்து எடுத்துக் கொண்ட போட்டோவை சமூக வலைத் தளத்தில் வெளியிட்டார். இந்நிலையில், சமூக வலைத்தளத்தில் சச்சின் டெண்டுல்கர் ரசிகர்களின் கேள்விகளுக்கு பதிலளித்தார். அப்போது ஒரு ரசிகர், சூர்யாவை சந்தித்த அனுபவம் குறித்து கேட்டார். அதற்கு பதிலளித்த சச்சின் டெண்டுல்கர், ‘நேரில் சந்தித்தபோது, ஆரம்பத்தில் நாங்கள் இரண்டுபேரும் ரொம்பவே கூச்சப்பட்டோம். ஒருவரை ஒருவர் தொந்தரவு செய்வதற்கு விரும்பவில்லை. ஆனால், இறுதியில் இருவரும் நன்றாகப் பேசிக்கொண்டோம்’ என்றார். இந்தப் பதிவை இருவரது ரசிகர்களும் தங்களின் சமூக வலைத்தளங்களில் அதிகளவில் பகிர்ந்து வருகின்றனர்.

The post சூர்யாவுடன் பேசியது என்ன?: சச்சின் பதில் appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.

Related Stories: