தமிழ்நாட்டுக்கு செய்த துரோகத்தை மக்கள் மன்னிக்க மாட்டார்கள்: திமுக எம்.பி. தயாநிதிமாறன் பேச்சு

டெல்லி: தமிழ்நாட்டுக்கு பாஜக அரசு செய்த துரோகத்தை மக்கள் ஒருபோதும் மன்னிக்க மாட்டார்கள் என்று பட்ஜெட் மீதான விவாதத்தில் திமுக எம்.பி. தயாநிதிமாறன் தெரிவித்துள்ளார். பீகாருக்கு அதிக நிதி கொடுத்ததற்கு காரணம், மைனாரிட்டி பாஜக அரசை கூட்டணி மூலம் காப்பாற்றுவதற்காக மட்டுமே. ஆந்திராவை தவிர தென்னிந்திய மாநிலங்கள் அனைத்தும் ஒன்றிய அரசின் பட்ஜெட்டில் புறக்கணிக்கப்பட்டுள்ளன. ஆந்திரா, பீகாருக்கு நிதி கொடுப்பதை நாங்கள் எதிர்க்கவில்லை; ஆனால் பிற மாநிலங்களை தண்டிக்கக் கூடாது என அவர் கூறினார்.

The post தமிழ்நாட்டுக்கு செய்த துரோகத்தை மக்கள் மன்னிக்க மாட்டார்கள்: திமுக எம்.பி. தயாநிதிமாறன் பேச்சு appeared first on Dinakaran.

Related Stories: